follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1கொழும்பில் அதிகரிக்கும் 'குண்டு' குழந்தைகள்

கொழும்பில் அதிகரிக்கும் ‘குண்டு’ குழந்தைகள்

Published on

சமீபத்திய கணக்கெடுப்பு அறிக்கைகளின்படி கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களின் உடல் பருமன் 8 வீதமாக அதிகரித்துள்ளது.

குழந்தைகளின் உடல் பருமன் வளர்ச்சி அவர்களின் எதிர்காலத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், தொற்று அல்லாத நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

புரோட்டீன் நிறைந்த உணவுகளை வாங்குவதில் உள்ள சிரமத்தால், குழந்தைகள் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதுவே குழந்தைகளின் உடல் பருமன் அதிகரிப்பதற்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் வருங்கால சந்ததியினருக்கு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இதயக் கோளாறுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

முடிந்தவரை மாவு உணவுகளை குறைத்து, புரதச்சத்து நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு வழங்குவதன் மூலம் உடல் பருமனை தடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...