மிகவும் கஷ்டத்துடனேயே வாழ்கிறேன் – சனத் நிஷாந்த

749

அமைச்சர்களுக்கான வசதிகள் இல்லை எனவும், உத்தியோகபூர்வ காரை பராமரிக்க அமைச்சுக்களில் பணம் இல்லை எனவும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கங்களின் போது அமைச்சர்களுக்கு சிறப்புரிமைகள் இருந்ததாக தாம் கேள்விப்பட்ட போதிலும், தற்போதைய அமைச்சர்கள் மிகவும் கஷ்டமான வாழ்க்கை வாழ்கின்றனர் எனவும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த நாட்டு மக்களுக்காகவும் எதிர்கால சந்ததியினருக்காகவும் அந்த கஷ்டங்களை தாங்குவேன் என்றும் தற்போதைய அமைச்சர்கள் நாட்டை கட்டியெழுப்புவதற்காக தமது வாழ்வை அர்ப்பணிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here