தனியார் துறையினருக்கும் சம்பள அதிகரிப்பு

731

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனியார் துறை உயர் அதிகாரிகளை சந்தித்துள்ளார்.

இதன்படி எதிர்காலத்தில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான ஆலோசனைகளை அவர்களிடமிருந்து பெற்று வரவு செலவுத்திட்டத்தை தயாரிப்பதே இதன் நோக்கமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆடை, சுற்றுலா போன்ற துறைகளில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் அரச துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலும் ஜனாதிபதி கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், நாட்டைக் கட்டியெழுப்புவது தொடர்பில் பொருளாதாரத்தை மீட்பதே இந்த கலந்துரையாடலின் நோக்கமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here