follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1தாங்களாகவே இராஜினாமா செய்யுங்கள் - கிரிக்கெட் அதிகாரிகளுக்கு நோட்டீஸ்

தாங்களாகவே இராஜினாமா செய்யுங்கள் – கிரிக்கெட் அதிகாரிகளுக்கு நோட்டீஸ்

Published on

இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு இலங்கை கிரிக்கெட் சபையும் கிரிக்கெட் தெரிவுக்குழுவும் பொறுப்பேற்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வான்கடே மைதானத்தில் நேற்று (02) நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 302 ஓட்டங்களால் தோல்வியடைந்ததுடன், இலங்கை அணி 55 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

உலகக் கிண்ண வரலாற்றில் இலங்கை அணியால் குறைந்த ஓட்டங்களை விட்டுக்கொடுத்த அணி என்ற சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது.

இலங்கை அணியின் தொடர் தோல்விகளால் கிரிக்கெட்டை நேசிக்கும் அனைவரும் வருத்தமும் கவலையும் அடைந்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தனது அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்குப் பொறுப்பானவர்கள் உரிய இடத்தில் கிரிக்கெட் நிர்வாகத்தில் இருந்து விலக வேண்டும் என்றும், பேதைகள் போல் நடந்து கொள்ளாமல், கடுமையான நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கூறுகிறார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில்...

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...