தாங்களாகவே இராஜினாமா செய்யுங்கள் – கிரிக்கெட் அதிகாரிகளுக்கு நோட்டீஸ்

3236

இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு இலங்கை கிரிக்கெட் சபையும் கிரிக்கெட் தெரிவுக்குழுவும் பொறுப்பேற்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வான்கடே மைதானத்தில் நேற்று (02) நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 302 ஓட்டங்களால் தோல்வியடைந்ததுடன், இலங்கை அணி 55 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

உலகக் கிண்ண வரலாற்றில் இலங்கை அணியால் குறைந்த ஓட்டங்களை விட்டுக்கொடுத்த அணி என்ற சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது.

இலங்கை அணியின் தொடர் தோல்விகளால் கிரிக்கெட்டை நேசிக்கும் அனைவரும் வருத்தமும் கவலையும் அடைந்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தனது அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்குப் பொறுப்பானவர்கள் உரிய இடத்தில் கிரிக்கெட் நிர்வாகத்தில் இருந்து விலக வேண்டும் என்றும், பேதைகள் போல் நடந்து கொள்ளாமல், கடுமையான நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கூறுகிறார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here