ரக்பி மீது விதித்திருந்த தடை நீக்கம்

128

உலக ரக்பி சம்மேளனம் இலங்கை ரக்பி மீது விதித்திருந்த தடையை நீக்கியுள்ளது.

ஆசிய ரக்பி சம்மேளனத்தின் தலைவர் கைஸ் அல் தலாய் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (04) காலை டுபாயில் இடம்பெற்றது.

உலக ரக்பி சம்மேளனத்தின் இலங்கை ரக்பிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதாக ஆசிய ரக்பி சம்மேளனத்தின் தலைவர் பெரிஸில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த முடிவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் ஆசிய ரக்பி சம்மேளனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here