follow the truth

follow the truth

August, 21, 2025
HomeTOP1அதிக விலைக்கு சீனி விற்கும் வர்த்தகர்கள் மீது வழக்கும், அபராதமும்

அதிக விலைக்கு சீனி விற்கும் வர்த்தகர்கள் மீது வழக்கும், அபராதமும்

Published on

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலைக்கு அதிகமாக சீனியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சீனி கையிருப்பு தொடர்பான புதிய வரி தொகையை கணக்கிட்டு அதிக விலைக்கு சீனி விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியெல்ல தெரிவித்தார்.

வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட அதிகமாக சீனியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபை வழக்குத் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 03 ஆம் திகதி முதல் நுகர்வோர் அதிகாரசபையானது சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தலை 80/8 ஆணை இலக்கத்தின் கீழ் நிர்ணயித்ததுடன், அதில் பொதி செய்யப்படாத வெள்ளை சீனி கிலோ ஒன்றுக்கு 275 ரூபாவும் பொதி செய்யப்பட்ட ஒரு கிலோவிற்கு 295 ரூபாவும் அதிகபட்ச சில்லறை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொதி செய்யப்படாத பிரவுன் சீனி 330 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட பிரவுன் சீனி கிலோ ஒன்றின் விலை 350 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...