follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉலகம்இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தவும்

இஸ்ரேல் – ஹமாஸ் போரை நிறுத்தவும்

Published on

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் உடனடியாக தலையிட்டு பலஸ்தீன குடிமக்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இஸ்ரேலிய ஹமாஸ் நெருக்கடி தொடர்பான நீண்ட கலந்துரையாடலின் போது, ​​ஈரான் ஜனாதிபதி ரைசி, இந்தியப் பிரதமர் மோடியிடம் தொலைபேசி அழைப்பில் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் நெருக்கடியில் இந்தியாவின் பங்கு முக்கியமானது என இந்திய பிரதமர் மோடியிடம் ஈரான் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் காஸாவில் 10,000க்கும் மேற்பட்ட பலஸ்தீன பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

யூத இஸ்ரேல் முஸ்லிம் பலஸ்தீனியர்களை ஒடுக்குவது தவறு என்றும், பலஸ்தீன மக்களின் பாதுகாப்பிற்காக ஒட்டுமொத்த உலகமும் இஸ்ரேலை எதிர்க்க வேண்டும் என்றும் இந்திய பிரதமர் மோடியிடம் ஈரான் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வரி விகிதங்கள் குறித்து டிரம்பின் விசேட அறிவிப்பு

ஜூலை 9 ஆம் திகதியுடன் வரிச்சலுகை காலாவதியாகும் நிலையில், அதற்கு முன் நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்கள் குறித்து...

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்...

Medicaid நிதி குறைப்பு – ட்ரம்ப் அரசை கடுமையாக விமர்சித்த ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது வரி குறைப்பு யோசனைக்கு பின்னர், மருத்துவ உதவித் திட்டமான Medicaid நிதியை...