வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு இருபதாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் எனவும் இல்லை என்றால் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மகஜர் ஒன்று நேற்று (06) கையளிக்கப்பட்டதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த மகஜர் ஒன்றின் பிரதி நிதி அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டதுடன், தயாரிக்கப்பட்ட மகஜரை நிதியமைச்சின் பிரதிநிதி ஒருவர் ஏற்றுக்கொண்டதாக சங்கத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் செயலாளர் சந்தன சூரியராச்சி தெரிவித்தார்.
அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் வரவு செலவுத் திட்டத்தில் சில அரச ஊழியர்களுக்கு அதிகரிப்பு செய்வதாகக் குறிப்பிடுவதாகவும், மேலும் ஒரு குழு அமைச்சர்கள் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பணமில்லை என கூறுவதாகவும் இதனால் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எரிவாயு, மின்சாரக் கட்டணம், எரிபொருள் விலை, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகவும், இதன் காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இருபதாயிரம் ரூபா கொடுப்பனவு கண்டிப்பாகத் தேவைப்படுவதாகவும், தற்போதுள்ள பிரச்சினைகளை ஒரு கொடுப்பதன் மூலம் தீர்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.