இம்மாதம் 12ஆம் திகதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இம்மாதம் 13ஆம் திகதி விடுமுறை வழங்குமாறு மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு கமகே மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேனகா ஹேரத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இம்மாதம் 12ஆம் திகதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால், மறுநாள் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வரமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இம்மாதம் 13ஆம் திகதி வழங்கப்படும் விடுமுறையில் பாடசாலைகளை வார விடுமுறையில் நடத்த வேண்டும் என ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.