follow the truth

follow the truth

July, 1, 2025
HomeTOP1ரோபோவால் தாக்கப்பட்டு ஒருவர் மரணம்

ரோபோவால் தாக்கப்பட்டு ஒருவர் மரணம்

Published on

தென் கொரியாவில் ரோபோ தாக்கியதில் அந்நிறுவன ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உணவு அடங்கிய பல பெட்டிகளை சரியாக அடையாளம் காணத் தவறியதால் அந்த நபர் ரோபோவால் தாக்கப்பட்டார்.

40 வயதான அந்த நபர் ரோபோவை சோதனை செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்த நபரை ரோபோ பிடித்து அவரது முகம் மற்றும் மார்பை நசுக்கியதாக தென் கொரிய செய்தி நிறுவனமான யொன்ஹெப் தெரிவித்துள்ளது.

காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் பின்னர் இறந்தார்.

ரோபோவின் பணி மிளகு பெட்டிகளை தூக்கி தட்டுகளுக்கு மாற்றுவதாகும்.

நவம்பர் 8 ஆம் திகதி, இறந்த தொழிலாளி தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள மிளகு வரிசைப்படுத்தும் ஆலையில் பயன்படுத்துவதற்காக ரோபோவை சோதித்துக்கொண்டிருந்தார்.

அதன்படி, சோதனை ஓட்டத்திற்கு முன், அந்த ஊழியர் ரோபோவின் சென்சார் செயல்பாடுகளை சரிபார்த்துக்கொண்டிருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்த வகையில், மார்ச் மாதம், 50 வயது தென் கொரிய நபர், கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலையில் பணிபுரியும் போது, ​​ரோபோ மோதியதில், பலத்த காயமடைந்திருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாடசாலை போக்குவரத்து வேன் கட்டணம் குறித்து அறிவித்தல்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் கட்டணம் அதிகரிக்கப்படாது என இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்க தலைவர் மல்ஸ்ரீ...

பிள்ளைகள் யாசகம் எடுப்பது தொடர்பான சட்டங்கள் இன்று முதல் கடுமையாக்கப்படும்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் யாசகம் எடுப்பது, வர்த்தகம் செய்வது மற்றும் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வீட்டு...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் கைது

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால்...