follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

Published on

எது நடந்தாலும் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து தரப்பினரிடமும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சட்டத்தின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு நீதித்துறையின் சுதந்திரம் இன்றியமையாததாகும் என்பதை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எப்போதும் கருதுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பான வழக்கு குறித்து அமைச்சரவை அமைச்சர் ஒருவர் நேற்று (08) பாராளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டு சட்டத்தரணிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் உண்மை மற்றும் பொய்மையை விசாரணை செய்வதற்கு பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான நபர்களை நியமிக்க வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருக்குமானால், அது இலங்கையின் நீதித்துறை மீதான நம்பிக்கையை சீர்குலைத்துவிடும் என சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபிக்கப்பட்டால், நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுக்கு உள்ளாக வேண்டும் என அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...