கிரிக்கட் மாற்றங்கள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரின் கருத்துக்களை பெற்று ஆலோசனைகளை வழங்குவதற்கு அமைச்சரவை உபகுழு தயாராக இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டது அணியையோ அல்லது பயிற்றுவிப்பாளர்களையோ தெரிவு செய்வதற்கு அல்ல எனவும் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
காஞ்சன காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவிக்கையில்;
“.. உலகில் உள்ள மற்ற அணிகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் இளம் கிரிக்கெட் அணி உள்ளது. அவர்கள் மூத்த அணிகளுடன் போட்டியிட வேண்டும். அந்த மூத்த வீரர்களின் அனுபவம் மற்றும் திறமையை நமது அணி கருத்தில் கொள்ள வேண்டும்..”