டீசல் மற்றும் பெட்ரோல் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள அனைத்து தடைகளையும் நீக்க ரஷ்ய அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்பாராதவிதமாக உள்நாட்டில் எரிபொருள் விலை உயர்ந்ததாலும், பங்குகள் பற்றாக்குறையாலும் எரிபொருள் ஏற்றுமதிக்கு ரஷ்யா செப்டம்பர் 21ம் திகதி முதல் தடை விதித்தது.
பிற நாடுகளுக்கு குழாய்கள் மூலம் எரிபொருளை அனுப்ப விதிக்கப்பட்டிருந்த தடை அக்டோபர் 6ஆம் திகதி நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.