காஸா பகுதியை ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை

545

போர்நிறுத்தத்தை நிராகரித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காஸா பகுதியில் தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள், காஸா பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ் அமைப்பை பலவீனப்படுத்தும் நோக்கத்தில் இருப்பதாகவும், காஸா பகுதியை ஆக்கிரமிக்கும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக நமது ராணுவம் வெற்றிகரமாக போரிட்டு வருகிறது. நமது ராணுவத்திற்கு அதிக நன்மைகள் உள்ளன. போர் நிறுத்தத்திற்கு செல்ல வேண்டிய தேவையோ விருப்பமோ இல்லை. ஹமாஸ் போராளிகள் தோல்வியை ஏற்று சரணடைந்தால் மட்டுமே போர் நிறுத்தம் குறித்து பரிசீலிக்க முடியும் என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ‘ஃபாக்ஸ் நியூஸ்’ செய்தி சேனலுடனான உச்சிமாநாட்டு கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

ஹமாஸ் போராளிகளை வேரறுக்கும் இஸ்ரேலின் முடிவை ஆதரிப்பதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. இந்த நேரத்தில் இஸ்ரேல் போர்நிறுத்தத்திற்குச் சென்றால், தாக்குதல்களில் இருந்து பின்வாங்கிய ஹமாஸ் போராளிகள் மீண்டும் பலமடையக்கூடும் என்றும் அமெரிக்கா சர்வதேச சமூகத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது, ​​இஸ்ரேலியப் படைகள் காஸா பகுதியில் உள்ள ‘காஸா நகரை’ சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. 50,000க்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் காஸாவிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கிடையில் மனிதாபிமான காரணங்களை கருத்தில் கொண்டு, நான்கு மணிநேரம் தாக்குதல்களை நிறுத்தவும், காஸா நகரவாசிகளை நகரை விட்டு வெளியேற அனுமதிக்கவும் இஸ்ரேல் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here