கிரிக்கெட் சர்ச்சை – தீர்ப்புக்கு எதிராக களமிறங்கும் விளையாட்டு அமைச்சர்

562

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்காக தனியார் சட்டத்தரணிகள் குழுவுடன் தொடர்பு கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யுமாறு எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளரான கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here