follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1டயானாவின் கோரிக்கைக்கு தலைமை நீதிபதி பதில்

டயானாவின் கோரிக்கைக்கு தலைமை நீதிபதி பதில்

Published on

ஐக்கிய மக்கள் சக்தி தனது கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே சமர்ப்பித்த மனுவை விசாரிப்பதற்கு முழு பீடத்தை நியமிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கை தொடர்பில் எதிர்காலத்தில் பொருத்தமான தீர்மானம் வழங்கப்படும் என பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இன்று (15) திறந்த நீதிமன்றில் அறிவித்தார்.

டயானா கமகேவின் மனுவை முழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்குமாறு கோரி அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி உதித இஹலஹேவா முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த பிரதம நீதியரசர் இந்த உத்தரவை அறிவித்துள்ளார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, ஜனக் டி சில்வா மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்தக் கோரிக்கை இன்று பரிசீலிக்கப்பட்டது.

டயானா கமகே சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி உதித இஹலஹேவா, அரசியல் கட்சி உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை பறிக்கப்படுவது தொடர்பில் உச்ச நீதிமன்றம் அண்மையில் பல தீர்மானங்களை அறிவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதிவாதிகள் தமது கட்சிக்காரரை பணிநீக்கம் செய்வதற்கு முன் நியாயமான ஒழுக்காற்று விசாரணையை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், எனவே இதனை பொது முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக கருதி உரிய மனுவை முழுமையான குழுவின் முன் பரிசீலிக்க உத்தரவிடுமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி கோரியுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...