follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று

Published on

பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று (20) நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கோப் குழுவின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக இன்று பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கோப் குழுவை தொடர்வதா அல்லது அதனை கலைத்துவிட்டு புதிய உறுப்பினர்களை நியமிப்பதா என்பது தொடர்பில் கலந்துரையாடப்படும் என பிரதி சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

மறு அறிவித்தல் வரை கோப் குழு கூட்டங்கள் நடத்தப்பட மாட்டாது என மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விசாரணை தொடர்பில் கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடியான சூழ்நிலையின் பின்னரே குறித்த தீர்மானம் எட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேன் பிரியசாத் கொலை வழக்கு – சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இன்று (09)...

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள்...

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு...