follow the truth

follow the truth

September, 21, 2024
HomeTOP1கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று

Published on

பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று (20) நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கோப் குழுவின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக இன்று பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கோப் குழுவை தொடர்வதா அல்லது அதனை கலைத்துவிட்டு புதிய உறுப்பினர்களை நியமிப்பதா என்பது தொடர்பில் கலந்துரையாடப்படும் என பிரதி சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

மறு அறிவித்தல் வரை கோப் குழு கூட்டங்கள் நடத்தப்பட மாட்டாது என மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விசாரணை தொடர்பில் கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடியான சூழ்நிலையின் பின்னரே குறித்த தீர்மானம் எட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...