குழு அறைகளில் வெளியாட்கள் நுழையத் தடை

246

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது சபாநாயகரின் அனுமதியின்றி வெளியாட்கள் யாரும் குழு அறைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று (20) விசேட அறிவிப்பொன்றை விடுத்த சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, தலைவரின் உத்தியோகபூர்வ அனுமதியுடன் வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது உறுப்பினர்கள் அல்லாதவர்கள் பாராளுமன்றக் குழுக் கூட்டங்களில் பங்கேற்க முடியும் எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், சில குழுத் தலைவர்கள் குழுவில் பணிபுரியும் வரம்பைத் தாண்டிச் செல்லும் போக்கு குறித்தும், அனைத்துக் குழுத் தலைவர்களும் நீண்ட காலமாக நாடாளுமன்றத்தின் மரபுகள் மற்றும் நடைமுறைகளைப் பாதுகாக்கும் வகையில் செயல்படக் கடமைப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி விசேட அறிவிப்பை வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here