நெடுஞ்சாலை வலையமைப்பை தனியார் மயமாக்குவதற்கான திட்டங்களை தயாரித்தல் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நாளை (22) வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனைத்து தரப்பு ஊழியர்களும் சுகயீன விடுமுறையைப் பதிவுசெய்து பணிக்கு வருவதைத் தவிர்ப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
பூர்வாங்க நடவடிக்கையாக இன்று (21) மாலை பனாகொட இராணுவ முகாமின் உப பிரிவினர் நெடுஞ்சாலை நடவடிக்கை மற்றும் பராமரிப்பு முகாமைத்துவ பிரிவின் கலனிகம பரிமாற்று பிரதான அலுவலகத்திற்கு வருகை தந்ததுடன், அதன் பராமரிப்பு மற்றும் செயற்பாடுகள் பணிப்பாளர் ஆர். ஏ. டி. கஹடபிட்டியவின் வழிகாட்டுதலின் பேரில், கடமைகளை உள்ளடக்கிய இடங்கள் பற்றிய புரிதலைப் பெற்றார்.