follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1பிரமோத்ய விக்கிரமசிங்கவுக்கு திங்களன்றும் அழைப்பு

பிரமோத்ய விக்கிரமசிங்கவுக்கு திங்களன்றும் அழைப்பு

Published on

தேசிய கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் பிரமோத்ய விக்கிரமசிங்கவிடம் இன்று (21) 5 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை பிரமோத்ய விக்கிரமசிங்க மீண்டும் அழைக்கப்படுவார் எனவும் விளையாட்டு குற்றங்களைத் தடுப்பதற்கான பொலிஸ் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் இன்று பிற்பகல் தெரிவித்தார்.

அந்த 5 மணி நேரத்தில் பிரமோத்ய விக்கிரமசிங்கவின் வாக்குமூலத்தில் நான்கில் ஒரு பங்கைப் பதிவு செய்ததாகக் கூறிய அதிகாரி, பிரமோத்ய விக்கிரமசிங்க சோர்வாக இருந்த காரணத்தினால் மாலை 4.15 மணியளவில் வாக்குமூலப் பதிவு நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

பிரமோத்ய விக்கிரமசிங்க இன்று காலை 11.15 மணியளவில் கொழும்பு சுகததாச விளையாட்டு வளாகத்திற்கு வெளியே உள்ள விளையாட்டு குற்றங்கள் தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு வருகை தந்தார்.

விளையாட்டு குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயநாத் வனசிங்கவின் மேற்பார்வையின் கீழ், அந்த பிரிவின் நிலைய கட்டளைத்தளபதி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சுபுல் விதானகே தலைமையில் வாக்குமூலம் பெறப்பட்டது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சி

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதன்படி, பல பகுதிகளில் முட்டையின் விலை 20 ரூபாய் முதல் 24...

ரம்பொட – கெரண்டிஎல்ல விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு (VIDEO)

ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா

இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியை திலக் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளார். அதற்கமைய, தனது இராஜினாமா கடிதத்தை எரிசக்தி அமைச்சகத்திடம்...