follow the truth

follow the truth

August, 2, 2025
HomeTOP1பிரமோத்ய விக்கிரமசிங்கவுக்கு திங்களன்றும் அழைப்பு

பிரமோத்ய விக்கிரமசிங்கவுக்கு திங்களன்றும் அழைப்பு

Published on

தேசிய கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் பிரமோத்ய விக்கிரமசிங்கவிடம் இன்று (21) 5 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை பிரமோத்ய விக்கிரமசிங்க மீண்டும் அழைக்கப்படுவார் எனவும் விளையாட்டு குற்றங்களைத் தடுப்பதற்கான பொலிஸ் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் இன்று பிற்பகல் தெரிவித்தார்.

அந்த 5 மணி நேரத்தில் பிரமோத்ய விக்கிரமசிங்கவின் வாக்குமூலத்தில் நான்கில் ஒரு பங்கைப் பதிவு செய்ததாகக் கூறிய அதிகாரி, பிரமோத்ய விக்கிரமசிங்க சோர்வாக இருந்த காரணத்தினால் மாலை 4.15 மணியளவில் வாக்குமூலப் பதிவு நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

பிரமோத்ய விக்கிரமசிங்க இன்று காலை 11.15 மணியளவில் கொழும்பு சுகததாச விளையாட்டு வளாகத்திற்கு வெளியே உள்ள விளையாட்டு குற்றங்கள் தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு வருகை தந்தார்.

விளையாட்டு குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயநாத் வனசிங்கவின் மேற்பார்வையின் கீழ், அந்த பிரிவின் நிலைய கட்டளைத்தளபதி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சுபுல் விதானகே தலைமையில் வாக்குமூலம் பெறப்பட்டது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...