இலங்கைக்கும் சீன எக்சிம் வங்கிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உடன்படிக்கை இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் நல்லதொரு முன்னோக்கு என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அனைத்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களிடமிருந்தும் நிதி உத்தரவாதங்களைப் பெற்றவுடன், சர்வதேச நாணய நிதியம் முதல் மதிப்பாய்வுக்குத் தயாராக உள்ளது என்று அதன் மூத்த பணித் தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்திருந்தார்.