செப்டெம்பர் மாதத்திற்கான ரூ 8571 மில்லியனானது, அஸ்வெசும வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
13 லட்சத்து 77,000 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், நாளை முதல் பயனாளிகளின் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
மேலும், மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலனை செய்த பின், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜூலை மாதம் முதல் பலன்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.