சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன மற்றும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (22) சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.
பொது சுகாதார பரிசோதகர் தொழில் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் சேவையை பாதிக்கும் பல தொழில்சார் பிரச்சினைகள் இங்கு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
சகல தொழில் துறையினருடனும் கூட்டு கலந்துரையாடல்களை மேற்கொண்டு தீர்மானங்களை எடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
குறுகிய காலத்தில் தீர்க்கப்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் எனவும், இந்த கலந்துரையாடலின் முன்னேற்றம் குறித்து ஒரு மாதத்தில் மீளவும் ஆராய்வதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.