நீதிமன்ற வளாகத்தில் 12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்

1330

கலகெதர நீதவான் நீதிமன்றத்திற்கு தனது தாயாருடன் நீதிமன்ற நன்னடத்தை அலுவலகத்திற்கு முன்பாக அமர்ந்திருந்த 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 58 வயதுடைய நபர் ஒருவர் கலகெதர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக சிறுமி நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.

சிறுமியின் தாயார் நன்னடத்தை அலுவலக அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்ததையடுத்து, குறித்த நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறுமி மற்றும் அவரது தாயாரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்த பொலிஸார், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக கலகெதர வைத்தியசாலையின் மாவட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கலகெதர பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here