ஒரு வாரத்திற்குள் கொல்லப்படுவார்..- உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன் மஹிந்த ராஜபக்சவுக்கு அச்சுறுத்தல்

1244

கொழும்பு 7, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக கூச்சலிட்டு கலவரத்தில் ஈடுபட்ட நபரை குருந்துவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்றைய தினம் காலை வந்த இவர், ஒருவார காலத்துக்குள் முன்னாள் ஜனாதிபதியை காணாத வகையில் கொலை செய்து விடுவேன் என சத்தமிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக கூச்சலிட்டதைக் கண்டு கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் குருதுவத்தை பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கிரிதிவெல பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here