கிரிக்கெட் நிறுவனத்தின் பிரச்சினைக்கு இம்முறை தீர்வு கிடைக்காவிடின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தீர்வு காணப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“.. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன். தணிக்கை அறிக்கையின் பிரகாரம் திருடியதாக நிரூபிக்கப்பட்டுள்ள வஞ்சக மற்றும் ஊழல் கும்பலை வீட்டுக்கு அனுப்புங்கள். கிரிக்கெட்டை வீழ்த்திய ஊழல் கும்பலுக்கு அந்த பொறுப்பை கொடுங்கள். முடியாவிட்டால் இப்போதே செய்து முடிக்க வேண்டும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அது சரி செய்யப்படும்.
ஐ.நா மாநாட்டிற்கு சென்ற ஜனாதிபதி என்ன சொன்னார்? ஊழலை ஒழிக்க வேண்டும் என்றார்கள். அப்படியிருக்க ஊழலை ஒழிப்பதற்காக பாடுபடும் எனக்கு எதிராக ஏன் செயல்படுகிறீர்கள்? நான் எப்போதும் ரொஷான் ரணசிங்கவாகவே இருப்பேன். அமைச்சராக எனது பாதுகாப்பு எப்படி உள்ளது? நீங்கள் விரும்பினால் எல்லா சாவிகளையும் தருகிறேன். அதைப் பாருங்கள். எனக்கு வாழ உரிமை கொடுங்கள். என் மனைவி குழந்தைகளுக்காக வாழ எனக்கு உரிமை கொடுங்கள்.. அகதி விசா கேட்டு வேறு நாட்டிற்கு தாவ நான் தயாராக இல்லை.
நான் வீதியில் கொல்லப்படலாம். அது இன்றா? நாளையா? என எனக்கு தெரியாது. ஜனாதிபதி தொடக்கம் சாகல ரத்நாயக்க வரை அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும்..” எனவும் அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.