இலங்கை மத்திய வங்கியின் பிரச்சினை தீர்க்கும் நிலையத்தில் ஐம்பது இலட்சம் ரூபா பணம் திருடப்பட்டமை தொடர்பில் இரண்டு விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது உள்ளக விசாரணை எனவும் உதவி அரசாங்க அதிபர் தலைமையில் விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.