follow the truth

follow the truth

May, 6, 2025
HomeTOP1ஒரு ஹெக்டேர் காபி பயிர்ச்செய்கைக்கு ஒரு மில்லியன் ரூபா

ஒரு ஹெக்டேர் காபி பயிர்ச்செய்கைக்கு ஒரு மில்லியன் ரூபா

Published on

அடுத்த வருடம் முதல் புதிதாக ஆரம்பிக்கப்படும் ஒரு ஹெக்டேர் காபி பயிர்ச்செய்கைக்கு ஒரு மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு அடுத்த வருடம் 400 ஹெக்டேர் காபியை நடுவதற்கு தீர்மானித்துள்ளதுடன், இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 400 மில்லியன் ரூபாவாகும்.

இலங்கையில் பிரதான பெருந்தோட்டப் பயிராக காபி பயிரிடப்படாவிட்டாலும், வெளிநாட்டு சந்தையில் காபிக்கான அதிக தேவையை கருத்தில் கொண்டு, காபி செய்கையை மீண்டும் ஒரு பெருந்தோட்டமாக பிரபலப்படுத்தும் நோக்கில் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Coffea Arabica (அரேபிகா காபி), Coffea Canephora (ரோபஸ்டா காபி), Libarica (லைபெரிகா காபி) ஆகியவை இந்த நாட்டில் பயிரிடப்படுகின்றன. அரேபிகா காபி மிகவும் பிரபலமான காபி வகை என்றும், அதன் பயிர்ச்செய்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – இதுவரையான வாக்களிப்பு வீதம்

உள்ளூராட்சி தேர்தலில் இன்று நண்பகல் 12 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதம் நுவரெலியா - 30 % பதுளை - -...

சீதுவ இரட்டைக் கொலை – சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

2024 டிசம்பர் 28 ஆம் திகதியன்று, சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லினகேமுல்ல, சீதுவை பகுதியில், மோட்டார் வாகனத்தில் வந்த...

பல்கலைக்கழக மாணவன் மரணம் – மேலும் இரு மாணவர்கள் கைது

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம்...