follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுஜெரோம் பெர்னாண்டோ நாடு திரும்பினார்

ஜெரோம் பெர்னாண்டோ நாடு திரும்பினார்

Published on

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டு சிங்கப்பூர் சென்ற போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று (29) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கை வந்தடைந்ததாக குடிவரவுத் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறான அவதூறான கருத்துக்களை வெளியிட்டதையடுத்து, போதகர் நீதிமன்றத்தால் கைது செய்ய, இலங்கைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு பின்னர் தடை நீக்கப்பட்டது.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று (29) காலை 01.32 மணிக்கு டோஹாவிலிருந்து கட்டார் ஏர்வேஸ் விமானமான KR-658 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், கட்டண “கோல்ட் ரூட்” சிறப்பு விருந்தினர் அறையின் ஊடாக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தார்.

இந்த போதகருடன் மேலும் இருவர் வந்துள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன....

மது, போதைப்பொருள் போன்றவற்றை ஊக்குவிக்கும் ஒரு யுகம் உருவாகியுள்ளது

அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டாலும், மது, போதைப்பொருள் மற்றும் சிகரெட் போன்றவற்றை ஊக்குவிக்கும்...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று  (18) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை, இரத்தினபுரி,...