follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1முதலீட்டிற்காக நிலத்தை அகற்றுவது தொடர்பிலான அரசின் தீர்மானம்

முதலீட்டிற்காக நிலத்தை அகற்றுவது தொடர்பிலான அரசின் தீர்மானம்

Published on

கண்டி நகருக்கான கலாசார மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கிரேட்டர் கண்டி திட்டம் அடுத்த வருடம் அறிவிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று (29) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 14 காணிகள் மற்றும் சொத்துக்களுக்கான முதலீட்டு முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

7,500 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை முதலீட்டாளர்களுக்கு அப்புறப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு முதலீட்டாளர்களுக்கு 10,500 மில்லியன் ரூபா பெறுமதியான காணிகளை குத்தகைக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

விசும்பாய கட்டிடத்தை உலகப் புகழ்பெற்ற ஹோட்டல் முதலீட்டாளரிடம் கையளிக்கவும் யாழ்ப்பாணம் ஜனாதிபதி மாளிகையில் உள்ள காணியை தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்காகவும் கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில், நிலத்தின் மதிப்பை ஒரேயடியாக செலுத்தாமல், 10 ஆண்டுகளில் செலுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் மருத்துவமனையில்

கொட்டாவையில் மலபல்லா பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில்...

பொசொன் தான நிகழ்சித் தொடர் குறித்து கலந்துரையாடல்

சிதுல்பவ்வ மற்றும் திஸ்ஸமஹாராம விகாரைகளை முதன்மைப்படுத்திய பொசொன் தான நிகழ்சி தொடர் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவை

எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக நான்கு நாட்களுக்கு விசேட ரயில் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே...