follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1இலங்கை சிறுவர்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவது தொடர்பில் மேலும் பல தகவல்கள்

இலங்கை சிறுவர்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவது தொடர்பில் மேலும் பல தகவல்கள்

Published on

இந்த நாட்டில் இருந்து மலேசியா ஊடாக வெளிநாடுகளுக்கு சிறுவர்கள் கடத்தப்படுவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கவனம் செலுத்த வேண்டுமென பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (30) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

“.. இந்த 13 குழந்தைகளும் மலேசியா சென்று வேறு நாடுகளுக்கு விற்கப்பட்ட செய்திதான் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நான் குடிவரவுத் துறையின் தலைமைக் கட்டுப்பாட்டாளருக்கு அழைப்பினை ஏற்படுத்தினேன். 16 வயதுக்குட்பட்டவர்களை நாட்டுக்கு செல்ல ஏன் அனுமதித்தீர்கள் என்று கேட்டேன். தற்போதைய சட்டத்தின்படி பிள்ளைகளுக்கு தனி கடவுச்சீட்டு பெறலாம். பின்னர் தான் புலனானது, மலேசியாவில் போலி கடவுச்சீட்டுகள் தயாரிக்கப்பட்டு மலேசிய கடவுச்சீட்டுக்கள் மூலம் இவ்வாறு பிள்ளைகளை அழைத்துச் சென்றுள்ளனர். சபாநாயகர் அவர்களே, அதை செய்ய முடியாது. மலேசியாவில் இருந்து யாராவது இலங்கைக்கு வந்தால், அது பற்றி கடவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியமான விடயம். இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கவனம் செலுத்த வேண்டும். மேலும் பல விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். எத்தனை பிள்ளைகள் உள்ளனர் என தெரியவில்லை எனவே இதனை முதலில் நிறுத்த வேண்டும். “

இது தொடர்பில் மெலினா பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், மலேசியா ஊடாக வெளிநாடுகளுக்கு சிறுவர்கள் கடத்தப்படுவது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம், வர்த்தகம், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப்பிரிவு ஆகியன விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

அந்த பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பிரிவு நடத்திய விசாரணையின் போது, ​​வடகிழக்கு பிரதேசங்களில் வசிக்கும் 18 வயதுக்குட்பட்ட தமிழ் சிறுவர்கள் மலேசியாவிற்கு அனுப்பப்படுவதாக அறிவித்துள்ளனர்.

இந்த குழந்தைகள் இந்த நாட்டில் இருந்து மலேசியா செல்வதற்கு சட்டபூர்வ கடவுச்சீட்டை பயன்படுத்துவதாகவும், மலேசியாவில் போலி கடவுச்சீட்டு தயாரித்து பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவுக்கு அனுப்புவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நாட்டிலிருந்து சுமார் 13 சிறுவர்கள் மலேசியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதில் இடைத்தரகர் கடத்தல்காரர் ஒருவர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல் விசாரணைகள் மற்றும் கடல்சார் குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...