follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுஇந்தியாவிலிருந்து சம்பா அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை

இந்தியாவிலிருந்து சம்பா அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை

Published on

எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்காக, அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம், இந்தியாவில் இருந்து 50000 மெற்றிக் தொன் சம்பா அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 10-12 திகதிக்குள் இந்த சம்பா அரிசியை லங்கா சதொச, கூட்டுறவு மற்றும் பல்பொருள் அங்காடிகள் ஊடாக நுகர்வோருக்கு கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அரச வர்த்தக பல்வேறு சட்ட ரீதியான கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.

பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்குத் தேவையான சம்பா அரிசியை வழங்குவதே சம்பா அரிசியை இறக்குமதி செய்வதன் நோக்கமாகும் என்றும் சம்பா அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.

சந்தையில் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், சில வியாபாரிகள் சம்பா அரிசியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு – இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்பு

தென் கொரியாவின் E-8 வீசா (பருவகாலத் தொழிலாளர் திட்டம்) கீழ் இலங்கை தொழிலாளர்களை ஈடுபடுத்தும் முன்னோடித் திட்டத்திற்கு 2025...

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நேரங்களில் மழை...

14 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் ‘ Sri Lanka Expo – 2026’

இலங்கை எக்ஸ்போ கண்காட்சி 2026 தேசிய வைபவமாக ஏற்பாடுகளைச் செய்வதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் அவர்கள்...