follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுஇந்தியாவிலிருந்து சம்பா அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை

இந்தியாவிலிருந்து சம்பா அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை

Published on

எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்காக, அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம், இந்தியாவில் இருந்து 50000 மெற்றிக் தொன் சம்பா அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 10-12 திகதிக்குள் இந்த சம்பா அரிசியை லங்கா சதொச, கூட்டுறவு மற்றும் பல்பொருள் அங்காடிகள் ஊடாக நுகர்வோருக்கு கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அரச வர்த்தக பல்வேறு சட்ட ரீதியான கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.

பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்குத் தேவையான சம்பா அரிசியை வழங்குவதே சம்பா அரிசியை இறக்குமதி செய்வதன் நோக்கமாகும் என்றும் சம்பா அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.

சந்தையில் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், சில வியாபாரிகள் சம்பா அரிசியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...