எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்காக, அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம், இந்தியாவில் இருந்து 50000 மெற்றிக் தொன் சம்பா அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 10-12 திகதிக்குள் இந்த சம்பா அரிசியை லங்கா சதொச, கூட்டுறவு மற்றும் பல்பொருள் அங்காடிகள் ஊடாக நுகர்வோருக்கு கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அரச வர்த்தக பல்வேறு சட்ட ரீதியான கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.
பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்குத் தேவையான சம்பா அரிசியை வழங்குவதே சம்பா அரிசியை இறக்குமதி செய்வதன் நோக்கமாகும் என்றும் சம்பா அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.
சந்தையில் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், சில வியாபாரிகள் சம்பா அரிசியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.