follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉலகம்ஹமாஸ் ராக்கெட் தாக்குதல் : போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது

ஹமாஸ் ராக்கெட் தாக்குதல் : போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது

Published on

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. அதாவது, ஹமாஸ் போராளிகள் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்காலிக போர்நிறுத்தம் ஒரு வாரத்தில் முடிவுக்கு வந்தது. போர் நிறுத்தம் கடந்த 24ம் திகதி தொடங்கியது. அது நான்கு நாள் போர் நிறுத்தம். பின்னர், இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததன் விளைவாக, போர் நிறுத்தம் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டது.

ஹமாஸின் ராக்கெட் தாக்குதல் போர்நிறுத்த விதிமுறைகளை மீறிய செயல் என்றும், காஸா பகுதியில் ஹமாஸ் போராளிகளை குறிவைத்து தாக்குதல்களை மீண்டும் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் ஒரு சிறப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளை போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ள வைத்தது கட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தான் வான்பரப்பு முற்றாக மூடப்பட்டுள்ளது

இந்தியா-பாகிஸ்தான் மோதல் அதிகரித்து வருகின்றமை காரணமாக, பாகிஸ்தான் தனது வான்வெளியை தற்காலிகமாக முழுவதுமாக மூட தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

அதிகரிக்கும் போர் பதற்றம் – இந்தியாவில் 32 விமான நிலையங்களுக்கு பூட்டு

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதனால் இந்திய வான்மண்டலங்களில் கட்டுப்பாடுகளை விதித்து விமான சேவைகளை ஒழுங்குப்படுத்தி...

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்...