பிலிப்பைன்ஸின் மின்டானோ தீவு அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்து பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பானுக்கு ஏற்பட்ட சுனாமி அச்சுறுத்தல் நீக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு மின்டானோ தீவுக்கு அருகில் 7.5 மற்றும் 6.1 ரிக்டர் அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
இதனால், சுனாமி அபாய எச்சரிக்கையினை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எனினும் சுனாமி அபாய எச்சரிக்கையினை தற்போது நீங்கியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.