follow the truth

follow the truth

February, 18, 2025
HomeTOP1நாட்டின் 2வது இயற்கை எரிவாயு மின் நிலையத்தை முத்துராஜவெலயில் நிர்மாணிக்க திட்டம்

நாட்டின் 2வது இயற்கை எரிவாயு மின் நிலையத்தை முத்துராஜவெலயில் நிர்மாணிக்க திட்டம்

Published on

நாட்டின் இரண்டாவது இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் முத்துராஜவெலயில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதன் கட்டுமாணப் பணிகள் அடுத்த ஆண்டு துவங்கி, 2026ல் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் 350 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் தொகுப்பில் சேர்க்கப்படும்.

இதன் கட்டுமாணச் செலவு 750 மில்லியன் ரூபா.

இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான முத்துராஜவெல பிரதேசத்தில் 10 ஏக்கர் காணி இந்த மின் நிலையத்தை அமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த காணியை வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

இந்த காணியை இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதன் மூலம் 720 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்குமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வருகிறார் மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர்

மாலைத்தீவுகளின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் பெப்ரவரி 18 முதல் 21 வரையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின்...

வரவு செலவுத் திட்டம் மற்றும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அரசாங்கத்தினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. வரவு செலவுத் திட்டம் மற்றும் எதிர்வரும்...

உள்ளூராட்சித் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றம்

உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மேலதிக பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 158 வாக்குகள் கிடைக்கப்...