இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மகளிர் ஏலத்தில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவர் சமரி அத்தபத்து 30 இலட்ச ரூபாய்க்கு ஆரம்ப விலையில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலிய பிக் பாஷ் மகளிர் போட்டியில் சமரி சிறப்பாக செயல்பட்டதால் இந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த முறை ஐ.பி.எல். மகளிர் போட்டிக்கான வீராங்கனைகள் ஏலம் மும்பையில் இம்மாதம் 9ஆம் திகதி நடைபெற உள்ளது இந்த ஏலத்தில் 104 இந்திய வீராங்கனைகளும், 61 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.