பேர ஏரியை அழகுபடுத்தும் திட்ட அறிக்கையை உடன் சமர்ப்பிக்க கோரிக்கை

193

பேர ஏரி அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கைகளை டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதி பணிமனையின் தலைவர் சாகல ரத்நாயக்க, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.

கொழும்பு நகரை அழகுபடுத்தும் திட்டம் மற்றும் அதன் தற்போதைய முன்னேற்றம் தொடர்பான அறிக்கையும் ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்கு உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனவும் சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

கொழும்பு நகரை அழகுபடுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பேர ஏரி அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சாகல ரத்நாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here