follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுயசோதா ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் செலுத்தத் தவறிய கடனை மக்கள் வங்கிக்கு மீள வழங்க உத்தரவு

யசோதா ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் செலுத்தத் தவறிய கடனை மக்கள் வங்கிக்கு மீள வழங்க உத்தரவு

Published on

யசோதா ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் மூலம் செலுத்தத் தவறிய கடனை மீளப்பெறுவதற்கு மக்கள் வங்கிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

யசோதா ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட், மக்கள் வங்கியிடமிருந்து பெறப்பட்ட 120 மில்லியன் ரூபா குறுகிய கால கடன் வசதிக்கான தொகையை மீட்பதற்காக, வங்கி மேல் மாகாண வர்த்தக மேல் நீதிமன்றில் எண். 90/99(1), வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில், மேற்படி வழக்கிற்கு உயர்நீதிமன்றம் சமீபத்தில் மக்கள் வங்கிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து யசோதா ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த 4ம் திகதி நிராகரித்துள்ளது.

அதன் பிரகாரம் கடன் வசதி தொடர்பில் செலுத்த வேண்டிய தொகையை மீளப்பெறுவதற்கு மக்கள் வங்கிக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக மக்கள் வங்கி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.ஏ. பார்த்தலிங்கம் அவர்களுடன் ஜனாதிபதியின் சட்டத்தரணி குஷான் டி அல்விஸ் மற்றும் சட்டத்தரணி ஹிரான் ஜயசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...