ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலகவினால், காலி கோட்டையை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளதா என இன்று (06) பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினரிடம் வினவப்பட்டது.
“காலி கோட்டைக்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகளிடம் பற்றுச்சீட்டு வசூலிக்கப்படுவதாக இப்போதெல்லாம் ஒரு சர்ச்சை உள்ளது. இன்னும் இல்லை. அதைப் பற்றி யோசிக்கவே வேண்டாம் என கூற விரும்புகிறேன்..”
“ஒவ்வொரு நாளும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காலி கோட்டைக்கு வருகை தருகின்றனர்.”
“சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பற்றுச்சீட்டு வழங்கினால், கோட்டைக்குள் சுற்றுலா பயணிகள் வரமாட்டார்கள்.”
“காலி கோட்டை 09 ஏக்கர், 03 கி.மீ அகலம் கொண்டது. சுற்றுலாப் பயணிகள் காலி கோட்டைக்கு சுற்றிலும் உள்ள காட்சிகளைக் காண வருகிறார்கள்.”
அதற்கு பதிலளித்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க;
“காலி கோட்டைக்குள் நுழையும் போது டிக்கெட் வாங்கும் எண்ணம் இல்லை. அருங்காட்சியகம் மற்றும் சிறப்பு இடங்களுக்கு மட்டுமே பணம் எடுக்கப்படுகிறது, அதை பராமரிக்க வேண்டும். ஏனெனில் கோட்டை சுவர் மண்சரிவு அபாயத்தில் உள்ளது. அவை பராமரிக்கப்பட வேண்டும்.”