follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டுமே.தீவுகள் வீரர்கள் ஒப்பந்தத்திலிருந்து விலகிய மூன்று வீர்கள்

மே.தீவுகள் வீரர்கள் ஒப்பந்தத்திலிருந்து விலகிய மூன்று வீர்கள்

Published on

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் அடுத்த ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்தத்திலிருந்து ஜேசன் ஹோல்டர், நிக்கோலஸ் பூரன் மற்றும் கெயல் மேயர்ஸ் ஆகியோர் விலகியுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை 2023-24 பருவகாலத்துக்கான வீரர்கள் ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. இதில் ஆடவர் அணியின் 14 வீரர்களுக்கு வருடாந்த ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.

குறித்த இந்த ஒப்பந்தத்திலிருந்து ஜேசன் ஹோல்டர், நிக்கோலஸ் பூரன் மற்றும் கெயல் மேயர்ஸ் ஆகியோர் விலகியுள்ள போதும், இவர்கள் அடுத்த ஆண்டுக்கான T20 போட்டிகளில் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக மேற்கிந்திய தீவுகள் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதேநேரம் புதிய வீரர்கள் சிலருக்கும் அடுத்த ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி குடகெஷ் மோடிஸ், கீஷி கார்டி, டெக்நரைஷ் சந்ரபோல் மற்றும் அலைக் அதனைஷ் ஆகியோருக்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் அடுத்த ஆண்டுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் அணியின் முன்னணி வீரர்களான கிரைக் பிராத்வைட், ஷேய் ஹோப், ரோவ்மன் பவெல், அல்ஷாரி ஜோசப், கெமார் ரோச் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் போன்ற ஆகியோரும் வருடாந்த ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஒப்பந்தத்தை பெற்றுள்ள மே.தீவுகள் வீரர்கள்

அலைக் அதனைஷ், கிரைக் பிராத்வைட், கீஷி கார்டி, டெக்நரைன் சந்ரபோல், ஜோசுவா டி சில்வா, ஷேய் ஹோப், ஆகில் ஹொஷைன், அல்ஷாரி ஜோசப், பிரெண்டன் கிங், குடகெஷ் மோடிஸ், ரோவ்மன் பவெல், கெமார் ரோச், ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெபர்ட்

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில்...

2026 உலகக்கிண்ண கால்பந்து – நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக தயாராகும் மெக்சிகோவின் மைதானம்

மெக்சிகோ நகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கிண்ண போட்டிக்காக நவீனப்படுத்தப்பட்டு 2026 மார்ச் 26, அன்று...