இந்நாட்டில் கடலில் அதிகளவு நெத்தலி மீன்கள் இருக்கும் போது நெத்தலி கருவாட்டினை இறக்குமதி செய்வதற்காக 995 கோடி ரூபா செலவிடப்படுவதாக கம்பஹா மாவட்ட சபை உறுப்பினர் அஜித் மான்னப்பெரும இன்று (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் அழிவுக்குப் பிறகு கோடிக்கணக்கான சிறிய மீன்கள் அழிந்ததாக அவர் குறிப்பிட்டார்.
கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் செலவுத் தலைப்பு மீதான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.