follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1ஜெரோம் பெர்னாண்டோ தொடர்ந்தும் விளக்கமறியலில்

ஜெரோம் பெர்னாண்டோ தொடர்ந்தும் விளக்கமறியலில்

Published on

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்த உத்தரவிற்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் கடந்த 1ம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்தார்.

சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வௌியிட்ட பின்னர் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, வௌிநாடு சென்றிருந்தார்.

வௌிநாடு செல்லத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையிலேயே அவர் சென்றிருந்தார்.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வௌிநாட்டில் இருந்தவாறே தம்மை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டை சமர்ப்பித்திருந்தார்.

மேன்முறையீட்டை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவர் நாடு திரும்பி 48 மணித்தியாலங்களுக்குள் குற்றப்புலனாய்வு திணைக்களம் சென்று வாக்குமூலம் வழங்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

குறித்த உத்தரவிற்கமைய, கடந்த 29ம் திகதி நாட்டிற்கு வருகை தந்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, கடந்த 1ம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களம் சென்று வாக்குமூலம் வழங்கியிருந்தார். பின்னர் இன்று வரைக்கும் அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிக்கும் பொஹட்டுவைக்கும் இடையில் நாளை முக்கிய கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை (28) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தல்...

ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக ஆரம்பமானது

உலகின் தலைசிறந்த விளையாட்டு விழா என அழைக்கப்படும் 33வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று (27) பிரான்சின் பாரிஸ் நகரில்...

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...