follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1பாடசாலை மாணவர்களுக்கு பதில் பொலிஸ் மா அதிபரின் மற்றுமொரு அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு பதில் பொலிஸ் மா அதிபரின் மற்றுமொரு அறிவிப்பு

Published on

எதிர்வரும் பாடசாலை விடுமுறைகள் முடிவடைவதற்குள் பாடசாலைகளைச் சுற்றியுள்ள மாணவர்களுக்கு, தீங்கு விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து இடங்களும் அகற்றப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“ஒவ்வொரு பாடசாலையிலிருந்தும் 500 மீட்டருக்குள் மாணவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை விற்கும் அனைத்து இடங்களும் மீண்டும் பாடசாலை தொடங்கும் போது இருக்க அனுமதிக்கப்படாது. இது தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீங்கு விளைவிக்கும் அனைத்தும் அகற்றப்படும்.”

எதிர்வரும் பாடசாலை விடுமுறை நாட்களில் அவ்வாறான இடங்களை சோதனை செய்து அகற்றுமாறு பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...