follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு எவ்வித கொடுப்பனவும் இல்லை

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு எவ்வித கொடுப்பனவும் இல்லை

Published on

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு இந்த வருடத்திற்கான போனஸ் கொடுப்பனவு அல்லது ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இது குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் 25% சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்த வேண்டாம் எனவும் அமைச்சர் மேலும் பணிப்புரை விடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், மின்சார சபை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பல்வேறு ஊக்கத்தொகைகள், கொடுப்பனவுகள் மற்றும் அதிகாரிகள் வாடகைக்கு எடுத்த வாகனங்கள் மற்றும் வாடகையாக செலுத்தப்பட்ட பணம் குறித்த அறிக்கையை வழங்குமாறும் மின்சார சபைத் தலைவரிடம் அமைச்சர் கோரியுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

இன்னும் இரண்டே மாதங்கள்.. நண்டு வெந்நீரில் ஆடுவது போல ஆடட்டும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வெறித்தனமான முறையில் நீதித்துறையுடன் மோதலை உருவாக்கி வருவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர...

பத்து மாதங்களில் 488 கொலைகள் பதிவு

2023 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான பத்து மாதங்களில் 488 கொலைகள் பதிவாகியுள்ளன. தேசிய கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள...

ராஜபக்ஷவின் ஆசி பெரும் எவருக்கும் ஆதரவு இல்லை

ராஜபக்ஷவின் ஆசியுடன் வரும் எவருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க...