இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு எவ்வித கொடுப்பனவும் இல்லை

438

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு இந்த வருடத்திற்கான போனஸ் கொடுப்பனவு அல்லது ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இது குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் 25% சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்த வேண்டாம் எனவும் அமைச்சர் மேலும் பணிப்புரை விடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், மின்சார சபை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பல்வேறு ஊக்கத்தொகைகள், கொடுப்பனவுகள் மற்றும் அதிகாரிகள் வாடகைக்கு எடுத்த வாகனங்கள் மற்றும் வாடகையாக செலுத்தப்பட்ட பணம் குறித்த அறிக்கையை வழங்குமாறும் மின்சார சபைத் தலைவரிடம் அமைச்சர் கோரியுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here