நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பர் மாதத்தில் நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் 83,432 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
டெங்கு அபாயம் உள்ள 65 வைத்திய அதிகாரி பிரிவுகள் இதுவரை பெயரிடப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது
கொழும்பு, கம்பஹா, கண்டி, களுத்துறை, புத்தளம், காலி, கேகாலை, குருநாகல், இரத்தினபுரி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.