தம்மை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை இரத்துச் செய்து ஆணை பிறப்பிக்குமாறு கோரி போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனைகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (22) நிராகரித்துள்ளது.
பௌத்த மதம் உள்ளிட்ட பிற மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த மனுவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆரம்ப ஆட்சேபனைகளை நீண்ட காலமாக பரிசீலித்ததன் பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளது.