தாக்குதல்களை முழுமையாக நிறுத்துவதற்கு இஸ்ரேல் ஒப்புக் கொள்ளும் வரை பணயக்கைதிகளை விடுவிக்க மாட்டோம் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் போர் நிறுத்தம் அமுலில் இருந்து இதுவரை சுமார் 2,000 ஹமாஸ் போராளிகளை கொன்றுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது.
போர் நிறுத்தத்தின் போது, சுமார் 100 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் மற்றும் 120 க்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் ஹமாஸின் காவலில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையும் இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த கடுமையாக முயற்சித்து வருகிறது.
அக்டோபர் 7 ஆம் திகதி நடந்த சம்பவத்திற்குப் பிறகு, இஸ்ரேலிய தாக்குதல்களால் இதுவரை 20,000க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.